districts

img

குடியரசு தினம், பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

அரியலூர், ஜன.19- அரியலூர் மாவட்டத்தில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின  விளையாட்டுப் போட்டிகள் கீழப்பழுவூர் தனியார் (சுவாமி) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறுகிறது.  போட்டிகளை மாவட்ட ஆட்சி யர் பெ.ரமண சரஸ்வதி தொட ங்கி வைத்தார். எம்எல்ஏக்கள்  கு.சின்னப்பா, க.சொ.க.கண் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இங்கு சிலம்பம் போட்டி மற்றும் சாலையோர சைக்கிள் போட்டியும், கீழப்பழு வூர் விநாயக மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கேரம் போட்டியும் நடைபெறுகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில், தமிழ்  நாட்டிலுள்ள 38 மாவட்டங்களி லிருந்தும் 2,660 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். முதல் 2 நாட்கள் மாணவி களுக்கும், மற்ற 2 நாட்கள் மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.  நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்கு நர் ஆ.அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் சுமதி,  ஊராட்சி மன்றத் தலைவர் தன லெட்சுமி, உடற்கல்வி ஆய்வா ளர் (பொ) குணசேகரன், பள்ளி தாளாளர்கள் கோவிந்தசாமி, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.