districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

அரியலூர், மார்ச் 1 - அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கு விலையில்லா உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் தேர்வுக் குழுவால் தேர்வு  செய்யப்பட்ட மற்றும் தகுதியான செவித்திறன் பாதிக்கப்பட்ட  மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான திறன்பேசி 5 மாற்றுத்திறனாளிகளுக்கு, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், 2  மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளும், ஒரு  மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலியும், 3 மாற்றுத்திறனா ளிகளுக்கு ஊன்றுகோல்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி வாட்ச்களும் என மொத்தம் 25 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1,85,196 மதிப்பில் பல்வேறு விலையில்லா உதவி  உபகரணங்கள் வழங்கப்பட்டன.