districts

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

அரியலூர், ஏப்.27 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள  ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணன் (27), உடையார்பாளை யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரி டம் காதலிப்பதாக கூறியும், தன்னை காதலிக்கவும் வற்புறுத்தியுள்ளார். மேலும் நான் உனக்கு பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாக கூறி,  பேருந்து  நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை தன்னுடன் வருமாறு  வற்புறுத்தியுள்ளார். மாணவி வர மறுத்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.  தொடர்ந்து மாணவியை விடாமல் துரத்திக் கொண்டு, அவரது வீட்டிற்கே சென்று பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமி  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப் பதிந்து  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திவெங்கட்ரமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;