districts

ஆக்கிரமிப்பை அகற்றி அளவீடு

ஜெயங்கொண்டம், ஏப்.27 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள  மேலக்குடியிருப்பு இடையன்குளம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அளவீடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஒப்புதலுடன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க. கண்ணன் வழி காட்டுதலின் பேரில், 12 ஆவது வார்டு கவுன்சிலர் இரா.அம்பிகாபதி தலைமை யில், நகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் ராஜேந்திரன் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டது.