districts

img

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

அரியலூர், பிப்.27 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்னவ நல்லூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை  ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.  அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், கர்ப்பிணி  பெண்கள் ஸ்கேன் பரிசோதனை, வயதானவர்கள் கை,கால்,  காது, மூக்கு தொண்டை, ரத்த அழுத்த பரிசோதனை, கண்  சம்பந்தமான பரிசோதனைகளை செய்து மருந்து மாத்திரை கள் வழங்கப்பட்டு வருகின்றன.  சித்த மருத்துவம் சார்பாக  பொதுமக்களுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இம்முகா மில் தென்னவநல்லூர், சுற்றுவட்டார பகுதிகளான வேம்புகுடி,  அணக்கரை வடிவார் தலைப்பு, குழவடையான், ஆயுதக்களம், தழுதாழை மேடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.