அரியலூர், மார்ச் 11- அரியலூர் மாவட்டம் திரு மானூரில் மாசிமகத்தை முன் னிட்டு சனிக்கிழமையன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ கு. சின்னப்பா முன்னிலை வகித்தார். மாநில போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஜல்லிக் கட்டை தொடங்கி வைத்தார். இதில், அரியலூர், பெரம்ப லூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல் வேறு மாவட்டங்களை சேர்ந்த 527 காளைகள் பங் கேற்றன. 166 வீரர்கள் மருத் துவ பரிசோதனைக்கு பிறகு தலா 40 வீரர்கள் என 4 குழுக்களாக காளை களை அடக்க அனும திக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையா ளர்களுக்கும் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் காளை களை அடக்க முயன்ற வீரர் கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையா ளர்கள் என 32 பேர் காய மடைந்தனர். இதில், படு காயமடைந்த கரைவெட்டி கருப்பையா (19), திரு வெங்கனூர் பெருமாள்(69) ஆகியோர் மேல்சிகிச்சைக் காக தஞ்சை அரசு மருத்து வக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மின்கம்பியில் விழுந்த பார்வையாளர் ஜல்லிக்கட்டை ஒரு வீட்டின் மாடியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஏலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பரத் (20) என்ற இளைஞர் எதிர்பாராத வித மாக தவறி, வீட்டின் அருகே சென்ற மின்கம்பியில் விழுந்ததால், மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதை யடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.