அரியலூர், மே 16 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குமிளங்குழி கிராமத்தில் புனித சவேரியார்யார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற் றது. ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். ஜல்லிக் கட்டை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் துவக்கி வைத்தார். போட்டியில் மதுரை, தஞ்சாவூர், கரூர், கடலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 402 காளை களும், 200 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளை களின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.