அரியலூர், மார்ச் 19- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிரா மத்தில் புனித வனத்து அந் தோணியார் ஆலய திருவிழா வை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை யொட்டி காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, ஜல்லிக் கட்டில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை உடையார் பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் பரிமளம் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளை யாக அவிழ்த்து விடப்பட் டன. இதில் தஞ்சாவூர், கட லூர், திருவாரூர், நாகப்பட்டி னம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மொத்தம் 654 காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. அவற்றை அடக்க சுழற்சி முறையில் தலா 25 பேர் வீதம் 250 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப் பட்டனர். சீறிப்பாய்ந்த காளை களை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் வீரர் களை பந்தாடின. இருப்பி னும் காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரி மையாளர்களுக்கும் சில்வர் அண்டா, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள், கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசு கள் வழங்கப்பட்டன. காளை கள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட மொத்தம் 32 பேர் காயமடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இருவர் ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற னர்.