districts

அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் அவதி பழுதடைந்த பழைய மின்மாற்றி மாற்றப்படுமா?

அரியலூர், ஜூலை 23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெரு மற்றும் வேலாயுத நகர் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வேலாயுத நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பழைய மின் மாற்றி இதுவரை மாற்றப்படாமல் உள்ளது. இதனால் வேலாயுதநகர் மூன்றாவது மற்றும் நான்காவது குறுக்குத் தெருவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் இந்திரா நகர் கீழத்தெரு சுடுகாட்டுக்கு அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளதால், அப்பகுதியிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே பழைய மின்மாற்றியை மாற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து நிகழும் மின்வெட்டால், இரண்டு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றியை பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.