அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பண்ணை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கா.சு.கண்ணன் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். கதிர் அரிவாள், மண்வெட்டி, பாறை, களைவெட்டி மற்றும் இடு பொருள்கள் அடங்கிய 6 தொகுப்பு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. இவை தா.பழூர் வட்டாரத்தில் 170 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.