districts

img

பள்ளியில் சேரவில்லை; வயது 2 தான் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்த அரியலூர் சிறுவன்

அரியலூர், ஜன. 23 - அரியலூரைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் 29 பிரபல தலைவர்கள், 14 தெய்வங்கள், 14 கார் சின்னங்கள், 13 வாகனங்கள், 9 வடிவங்கள், 32 பொருள்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்கள், 1 முதல் 20 வரையிலான எண்களை அடையாளம் கூறி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் இடம் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் எஸ்.கே.தக்ஷித்(2.5). இந்த சிறுவன் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை. “எங்கள் மகனின் அதிக நினைவாற்றலை பயன்படுத்தி, நாங்கள் அவரை பல்வேறு பாடநெறி நடவடிக்கைகளில் ஊக்குவித்து வழிகாட்டுகிறோம்” என சிறுவனின் தந்தை சிவக்குமார் தெரிவித்தார். “தனது கூர்மையான நினைவாற்றலுக்காக 2021 அக்டோபர் 26 அன்று இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் தக்ஷித் இடம் பெற்றார். தக்ஷித்துக்கு படிப்பு, வாசிப்பில் இருந்த ஆர்வம் எங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாக” அவரது தாயார் கமலவேணி தெரிவித்தார்.  120 நாடுகளின் கொடிகள் மற்றும் கிரகிக்கும் சக்தியை வளர்ப்பதற்கான புதிர்கள் போன்ற பல்வேறு செயல்களை அச்சிறுவன் அறிந்திருக்கிறார்.