அரியலூர், மே 25 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தர்மசமுத்திரம் பகுதியில் செல்லக்கூடிய செங்கால் ஓடைக்கு அருகில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் ஓடையின் நீர்வழியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக கூறி அப்பகுதியில் உள்ள 40 வீடு களுக்கு வருவாய்த்துறை மூலம் நோ ட்டீஸ் கொடுக்கப்பட்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர். ஓடைக்கும் குடியிருப்புக்கும் சுமார் 500 மீட்டர் இடைவெளி உள்ளது. நீர் வழியை ஆக்கிரமித்து வீடு கட்ட வில்லை. எனவே வீடுகளை இடிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகா ரிகளிடம் தெரிவித்தனர். எனினும் இதனை கேட்காத அதிகாரிகள் வீடு களை காலி செய்யவில்லையென்றால் வீடுகளை இடிப்போம் என கூறியுள்ள னர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், நீர்வழி ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆடு, மாடு, கோழிகளுடன் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருக்கும் வீடுகளை இடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.