districts

img

சாலை, குடிநீர், பேருந்து வசதி கோரி மாதர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், டிச.7- பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்திலிருந்து தா.பழூர், தாதம் பேட்டை வழியாக அடிக்காமலை கிராமத் திற்கு நகர பேருந்து இயக்க வேண்டும். பாலசுந்தரபுரம் கிராமத்தில் சுடு காட்டுக்கு எரியூட்டும் கொட்டகை அமைக்க வேண்டும் மற்றும் சாலை, தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். தா.பழூர் கடைவீதியில் பெண்களுக்கான பொது கழிப்ப றையை அமைக்க வேண்டும். கூத்தங் குடி காலனி மக்கள், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து மின் வசதி ஏற்படுத்த வேண்டும். கூத்தங்குடி பள்ளியின் அருகில், மாணவ-மாணவிகள் விளையாடு வதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். 3 கிராம மக்க ளும் இடநெருக்கடியில் வாழ்ந்து வருவ தால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் அரியலூர்  மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் உமாதேவி, கிளைத் தலைவர் விக்னேஷ்வரன் தலைமை வகித்தனர். மாதர் சங்கம் மாநிலத் தலைவர் வாலண் டினா சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் பத்மாவதி, மாவட்ட செயலா ளர் அம்பிகா, வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் ரவீந்திரன், கிளை செயலாளர்  பாலகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட  செயலாளர் எம்.இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ் ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.உத்ராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.