அரியலூர், ஏப்.9- ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார்கள் மீது விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படு வதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காவல் நிலையம் செயல் பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தக ராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளிக்க வந்து செல் கின்றனர். ஆனால் பொதுமக்கள் அளிக்கும் பல புகார்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை மற்றும் உரிய நட வடிக்கை மேற்கொள்ள ப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புகார் மீது விசாரணை நடத்து வதில் காலதாமதம் ஏற்பட்டு, அலைக்கழிக்கப்படுவதால் மன உளைச்சலுக்கு உள்ளா வதாக சில புகார்தாரர்கள் கூறுகின்றனர். சில புகார்கள் மீது உடனடியாக உரிய நட வடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில், சிறிய பிரச்சனை, பெரிய அளவிலான பிரச்ச னையாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடு கிறது. மேலும் ஒருசில போலீ சார் புகார் கொடுக்க வருப வரிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர். மேலும் ஒருசில போலீசார், கடைவீதிகளில் உள்ள சில கடைக்காரர்களி டம் பொருட்கள் மற்றும் உணவு போன்றவை வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல் உள்ளதாக கடைக்காரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. புகார் மீதான தாமதம் குறித்து புகார் அளித்தவர்கள் கேட்கும்போது, இந்த காவல் நிலையத்தில் முன்பு 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி புரிந்த நிலையில், தற்போது 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வரு கின்றனர். இதில் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இத னால் புகார்களின் மீதான விசாரணையில் தாமதம் ஏற்ப டுகிறது என போலீசார் தெரி விப்பதாக புகார்தாரர்கள் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற் கொண்டு, போதிய போலீ சாரை நியமித்து பொதுமக்க ளின் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். புகார் அளிக்க வருபவர் களை மரியாதையுடன் நடத்த போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.