அரியலூர், ஜூலை.18 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் ஆதார் அட்டை புதிதாக எடுத்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக் காக முகாம் அமைக்கப்பட்டுள் ளது. ஆதார் அட்டை எடுக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் உள்ளதால், அவர்கள் அரசு துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவ்வப்போது ஆங்காங்கே முகாம் நடத்திச் செல் கின்றனர். இதனால் தனியார் துறை சார்பில் நடத்தப்படும் ஆதார் அட்டை முகாம், பொது மக்கள் கவனத்திற்கு வருவ தில்லை. முகாம் நடைபெறு வது தெரியாமல் ஒவ்வொரு பகுதியில் இருந்தும், தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் அட்டை எடுக்கும் இடத்திற்கு பொது மக்கள் சென்று வருகின்ற னர். திங்களன்று காலை 9 மணிக்கு தா.பழூர் அரசி னர் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டை எடுத்தல் மற்றும் திருத்தம் சம்பந்த மாக தனியார் நிறுவனத்தினர் முகாமிட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப் படாமல் முகாம் நடை பெற்று வருகிறது. காலை முதல் நடை பெற்ற இம்முகாமில் மாலை 3 மணி வரை ஒரு நபர் மட்டுமே புதிதாக ஆதார் அட்டை எடுத்துள்ளார். இது குறித்து பொதுமக்களுக்கு போதிய முன் அறிவிப்பு வழங்கப்படாததால், முகாம் நடைபெறுவது பொது மக்களுக்கு தெரியாமல் உள்ளது. பொதுமக்கள் அதி கம் கூடும் இடங்களில் முகாம் நடத்தப்பட வேண் டும். இது மட்டுமின்றி, மாடி யில் முகாம் நடைபெறு வதால் முதியவர்கள்-குழந்தைகள் படிக்கட்டில் ஏறி செல்வதில் சிரமம் ஏற்படு கிறது. எனவே ஆதார் சம்பந்தமாக முகாம் நடை பெறும் பகுதி குறித்து, மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் பயன்பெறும் வகை யில் முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.