districts

img

ஆசிய தடகளப் போட்டி தங்கம் வென்ற வீராங்கனைக்கு சாலைப் பணியாளர் சங்கம் வாழ்த்து

அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் கலிய மூர்த்தி. இவர் அரியலூர் கோட்ட நெடுஞ்சாலை துறை யில் சாலைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவ ரது மகள் தங்கம் (16). இவர் சென்னை தமிழ்நாடு விளை யாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் பிபி இஎஸ் படித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள  மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்  டார். போட்டியில் 51 நாடு களைச் சேர்ந்த வீரர் வீராங்க னைகள் கலந்து கொண்ட தில் 22 கி.மீட்டர் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் 48 நிமிடம் 52 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்ற தங்கத்தை மாநில நெடுஞ்  சாலை துறை சாலை பணி யாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரி வித்தனர். மாநிலத் துணைப் பொது செயலாளர் ராஜா  சிதம்பரம், உடையார் பாளையம் பேரூராட்சி தலை வர் மலர்விழி ரஞ்சித், அரி யலூர் மாவட்ட செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் பங்  கேற்றனர்.