அரியலூர், ஜன.23 - அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 21,896 ஹெக்டேரில் சம்பா, தாளடி நெற் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. நெல் அறு வடைக்குப் பிறகு நெல் தரிசில் இயல்பாக 600 ஹெக்டேரில் உளுந்து, பச்சைப் பயறு போன்ற பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்ப டும். தற்போது, நெல் அறுவடைக்கு இயந்தி ரங்கள் பயன்படுத்துவதாலும், கால்நடை மேய்ச்சலாலும் நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வரு கிறது. இந்நிலையில், பயறு வகை சாகு படியை ஊக்குவிக்க, அரியலூர் மாவட்டத் தில் 2,300 ஹெக்டேரில் பயறு வகை பயிர் களை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, பயறு வகை பயிர்களை பயிர் செய்யும்போது வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படு கிறது. பயறு வகை பயிர்களை பயிர் செய்ய குறைவான தண்ணீரே போதுமானது. மேலும், அடுத்த குறுவை நெல்லுக்குத் தேவையான தழைச்சத்து இயற்கையாகவே கிடைக்க வழிவகை செய்கிறது.
குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்க ஏதுவா கிறது. நவரை நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிராக பயறு வகை சாகுபடியினால் மண் வளமாக்கப்படுகிறது. நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் உளுந்து பயறு விதைகளை விற்பனை செய்ய அனைத்து வேளாண்மை விரி வாக்க மையங்களிலும் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 சதவீத மானியத்தில் திரவ ரைசோபியம், திரவ பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள் விற்பனைக்காக அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சம்பா மற்றும் தாளடி அறுவடைக்குப் பிறகு நீர்ப்பாசன வசதி யுள்ள விவசாயிகள் பெரும்பாலும் கோடைக் கால நெல் பயிர் சாகுபடியை மேற்கொள் கின்றனர். இதேபோல, குறுவை, தாளடி, கோடை என தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்வ தால் மண் வளம் பெரிதும் பாதிப்படைகிறது.
மண்ணின் பிரதான பேரூட்டச் சத்தான தழைச்சத்தை நிலை நிறுத்த வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இதைத் தவிர்த்து, மண் வளத்தைப் பாதுகாக்கக் கூடிய உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைப் பயிர் களை சாகுபடி செய்து குறைந்த காலத்தில் மிகக் குறைந்த செலவில் உபரி வருமானம் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.