அரியலூர், மார்ச் 18 - மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தில் மயான ஆக்கி ரமிப்பை அகற்றிட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் தலித் மக்களுக்கும் கடன் வழங்க வேண்டும். ஆதி திராவிடர் காலனி தெருவில் சாலையின் இரு புறமும் நீர்வரத்து வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி னர். பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் அழகாபுரம் கிளை செயலாளர் வீராசாமி வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே. மகாராஜன், ஆர்.இளவரசன், பி.பத்மாவதி, மாவட்ட ஒன்றியக்குழு டி.அம்பிகா, எம்.அரு ணாச்சலம், ஒன்றியச் செயலாளர் வி.பரம சிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடிப்படை வசதிகளை தீர்க்கவில்லை யெனில், மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.