அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் தலைமை வகித்தார். தீக்கதிரின் திருச்சிப் பதிப்பு பொறுப்பாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, திருச்சிப் பதிப்பு பொது மேலாளர் ஜெயபால், அரியலூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், செந்துறை வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். முதல் தவணையாக 48 சந்தாவிற்கான தொகை வழங்கப்பட்டது.