அரியலூர், ஜூன் 9- ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் தொடங்க விவசாயிகளிடம் கையகப்ப டுத்தப்பட்ட நிலங்களை, திரும்ப வழங்கியது போல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொரு ளாதார மண்டலம், சிப்காட் தொழிற்சாலை நிறுவனங் கள் மூலம் கையகப்படுத்தப் பட்ட நிலங்களை விவசாயிக ளிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டம் தொடங்க விவ சாயிகளிடம் கையகப்படுத் தப்பட்ட நிலங்களை, விவ சாயிகளிடமிருந்து எந்தவித இழப்பீடும் பெற்றுக்கொள் ளாமல் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க தொழி லாளர் நலத்துறை உத்தர விட்டுள்ளது. ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள 13 கிராமங்க ளைச் சேர்ந்த விவசாயிகளிட மிருந்து தலா ஒரு ஏக்கர் 35 ஆயிரம் ரூபாய் வீதம் 8373 ஏக்கர் நிலம் டிட்கோ நிறு வனத்தால் கையகப்படுத்தப் பட்டது. தங்களுக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்க கோரி விவசாயிகள் பத்தாயிரம் வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறா மல் மீண்டும் தங்களிடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்பேரில் கடந்த 2ஆம் தேதி தொழிலாளர் நலத் துறை போடப்பட்ட உத்தர வில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்ட விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்கவும் நிலத்திற்காக விவசாயிகளுக்கு வழங்கப் பட்ட இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளாமல் மீண்டும் ஒப்படைக்க அனு மதித்துள்ளது. விவசாயிகள் தமிழக அர சிடமும் டிட்கோ நிறுவனத்திட மும் எவ்வித இழப்பீடும் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்ற உறுதி மொழியுடன் நிலங்களை தங்களுக்கு ஒப்படைக்கும் கோரிக்கை மனுவை வழங்க வேண்டும். அந்த கோரிக்கை மனு வினை மாவட்ட ஆட்சியர் பரி சீலித்து மீண்டும் அந்த நிலத்தை அதன் உரிமையா ளர் அல்லது அவர்களது உண்மையான வாரிசுதாரர்க ளுக்கு ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்று உத்தரவிட்டுள் ளது. இந்த உத்தரவினை ஜெயங்கொண்டம் பகுதி யில் உள்ள விவசாயிகள் வர வேற்று மகிழ்ச்சி தெரிவித் துடள்ள்ளனர். இதுகுறித்து சிபிஎம் அரியலூர் மாவட்டச் செயலா ளர் இளங்கோவன் கூறும் போது:- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத் தில் தற்போது ஆண்டிமடம் வட்டமாக இருக்கும் பகுதி யில் 13 கிராமங்களில் இருந்து 8373 ஏக்கர் நிலம் டிட்கோ நிறு வனத்தால் அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தப் பட்டது.
நிலங்கள் கையகப்படுத் தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் தொடங் கப்படாமலும் நிலத்தை விவ சாயிகளிடம் திருப்பி ஒப்ப டைக்காமலும் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் நிலம் கொடுத்த விவசாயிகள் சொந்த ஊரிலேயே அகதிக ளாக வாழக் கூடிய சூழல் ஏற்பட்டது. மேலும் அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய சலுகைக ளை பெற முடியாமலும், நிலத்தை அடமானம் வைக்க முடியாத சூழலில் விவசாயி கள் கடனாளியாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து கடந்த 2010- ஆம் ஆண்டு மாவட்ட செய லாளராக இருந்த டி.முருகே சன் தலைமையிலும், 2014 -15 களில் அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டங்களும், அரிய லூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்ட மும் தொடர்ந்து நடத்தி வந்தனர். இது சம்பந்தமாக மாநி லங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. நிலக்கரி திட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, திட்டம் தொடங்குவதற்கு எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை; திட்டம் கைவிடப் பட்டது என ஒன்றிய அரசு தெரிவித்தது. திட்டம் தொடங்க வில்லை என்று சொன்னால் விவசாயிகளிடமே நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என பேசினார். மேலும் ஒரு திட்டம் தொடங்குவதற்கு நிலத்தை அரசு கையகப் படுத்தும்போது 10 ஆண்டுக ளுக்குள் அந்த திட்டம் நிறை வேறவில்லை என்றால் நிலத்தை திரும்ப விவசாயிக ளிடம் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. அதன் படி அந்த விவசாயிகள் இடமே நிலத்தை மீண்டும் திருப்பி ஒப்படை செய்ய வேண்டும் என சட்டம் இருப் பாக எடுத்துக் கூறினார். எனவே அந்தப் பகுதி விவ சாயிகளின் நலன் கருதி விவ சாயிகளை ஒன்று திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாய சங்கமும் இணைந்து தொடர் போராட்டம் நடத் தப்பட்டது.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் முயற்சியால் திமுக அரசு விவசாயிகளிடமிருந்து கைய கப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டு தொகை கொடுத்ததைத் திருப்பி கேட் காமல் மீண்டும் விவசாயிக ளிடமே ஒப்படைக்க கூறி யது மிகப்பெரிய முன்னுதார ணம். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் அரியலூர் மாவட்டக் குழு வரவேற்கிறது. இதேபோன்று அரிய லூர், பெரம்பலூர் மாவட்டத் தில் சிறப்பு பொருளாதார மண்டலம் சிப்காட் தொழிற் சாலை இது போன்று பல நிறுவனங்களுக்கு கையகப் படுத்தப்பட்ட நிலங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைவு செய்ய வேண்டிய நடவ டிக்கையில் இறங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.