districts

வெளியேறும் துகள்களால் அவதி

அரியலூர், ஜன.7 - தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் துகள்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி, அந்த சிமெண்ட் ஆலையை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் வி.கை காட்டியை அடுத்த ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் சந்திரபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், இக்கிராமத்தை ஒட்டியுள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலையால், மேற்கண்ட கிராம மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இந்த சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறிய துகள்கள், சந்திரபாளை யம் முழுவதும் படிந்துள்ளது. சமையல்கூட செய்ய முடியாத அளவுக்கு சிமெண்ட் துகள்கள் படிந்துள்ளதால், அப்பகுதி மக்கள் சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தினந்தோறும் வெளியேறும் துகள்களால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை.

நாள்தோறும் பல  இன்னல்களுக்கு ஆளாகி வரு கிறோம்.  ஆகையால் ஆலை நிர்வாகம் வேறு இடத்தில் எங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் சிமெண்ட் ஆலை அலுவலர்கள், வரும் புதன்கிழமை பேச்சுவார்த்தைக்கு வரு மாறு தெரிவித்ததின் பேரில், போராட்ட த்தில் ஈடுபட்ட மக்கள்  கலைந்து சென்றனர்.