அரியலூர் மாவட்டத்தில் ரூ.65.25 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் நடைபெறுகிறது. அதனொரு பகுதியாக அரியலூர் அணிக்குதிச்சான் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை- நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகு சார்பில் பூவானிப்பட்டு முதல் கீழநெடுவாய் வரையிலான சாலை தரம் உயர்த்தும் பணியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். உடன் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர்.