districts

மீன்சுருட்டியில்  144 தடை உத்தரவு

அரியலூர், ஜன.31 - காடுவெட்டி கிராமத்தில் பிப்.1 அன்று குருவின் பிறந்த நாளை முன்னிட்டு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள்  எம்எல்ஏ குரு(எ)குருநாதன். தமிழகத்தின் வன்னியர் சங்க  தலைவராக இருந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மே  25 ஆம் தேதி அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தன. இந்நிலையில் அவரது பிறந்தநாள் பிப்ர வரி முதல் தேதியன்று கொண்டாடப்பட இருந்தது.

இதற்கிடையில் குருவின் பிறந்தநாளை பல்வேறு தரப்பினர் கொண்டாடுவர். பல்வேறு தரப்பினர் ஒன்றாக கூடும் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடும். இத னால் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைப் பகுதி மற்றும்  காடுவெட்டியில் நுழைவதற்கு  ஜன. 31, பிப்.1 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனுமதியின்றி உள்ளே நுழைய தடை  விதித்து உடையார்பாளையம் ஆர்டிஓ அமர்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் குருவின் பிறந்தநாளன்று, அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அவரது குடும்பத்தினர்  மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மட்டும் சென்று வர உள்ளனர்.  மேலும் பாப்பாக்குடி, வடவார் தலைப்பு, இராமதேவ நல்லூர், அறந்தாங்கி காடுவெட்டி, குறுக்கு ரோடு, படை நிலை ஆகிய இடங்களில் போலீசாரின் சோதனைச் சாவடி களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.