districts

img

25 அடி உயரத்தில் தொங்கியபடி யோகாசனம் செய்து 11 வயது சிறுமி உலக சாதனை    

25 அடி உயரத்தில் 8 நிமிடங்கள் தொங்கியபடி யோகாசனம் செய்து 11 வயது சிறுமி உலக சாதனை படைத்துள்ளார்.    

விருதுநகர் மாவட்டம் சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ்-பார்வதி தம்பதியின் மகன் முஜிதா(வயது 11). இவர் கடந்த 5 வருடங்களாக யோகா பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் 25 அடி உயரத்தில் 8 நிமிடங்கள் தொங்கியபடி வளையத்திற்குள் உடம்பை வில் போன்று வளைத்து வாளை கிழியாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.    

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேற்பார்வையாளர்கள் சிறுமிக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி பாராட்டி தெரிவித்தனர்.