districts

img

காரியாபட்டியில் வளர்ச்சித் திட்டப்  பணிகளை ஆட்சியர்  ஆய்வு

 விருதுநகர், பிப்.14- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு  செய்தார். காரியாபட்டி ஒன்றியம், வடகரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக்  சாலை, பிசிண்டி ஊராட்சியில்  ரூ.5 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட தடுப்பணையையும் ஆட்சியர் பார்வையிட்டார். பின்பு,  பிசிண்டி, மாந்தோப்பு, அழகியநல்லூர், கெப்பி லிங்கம்பட்டி, கல்குறிச்சி சமத்துவபுரம் ஆகிய பகுதியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை  உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம்,  அடிப்படை வசதிகள், பள்ளியின் தூய்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.   இந்த ஆய்வின்போது,  திட்ட இயக்குநர் தெய்வேந்தி ரன், நேர்முக உதவியாளர்(சத்துணவு) இரா.லீலா,   வட்டார  வளர்ச்சி அலுவலர்கள்  சிவக்குமார், சண்முகப்பிரியா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.