districts

சிறையில் கைதி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

விருதுநகர், மே 14- விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதி ஒருவர்  மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேர்   மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள னர். விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிரா மத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஒரு  வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய சிலம்பரசனின் கூட்டாளிகளான இரு ளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய மூவ ரும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிலம்பரசன்,  பிணை யில் வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது கூட்டாளிகள் 3 பேரும் தங்களுக்கும் ஜாமீன் பெற்று தருமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு சிலம்பரசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய மூவரும் சேர்ந்து,  சிலம்பரசனை கடுமையாக தாக்கி னார்களாம். இதில் சிலம்பரசன் படுகாயம டைந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில்  இருந்த சிறைக்காவலர்கள், சிலம்பரசனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தாமரைக்கனி விருது நகர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் தாக்கு தல் நடத்திய 3 பேர்  மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.