வேலூர், டிச.8 – திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா விஐடி வேலூர் வளாகத்தில் நடைபெற்றது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கிடையே இந்த போட்டி நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், குழு உறுப்பினர் ரமணி சங்கர், உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பங்கேற்றதுடன் வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்தனர்.
விஐடி வேலூர் வளாகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து தங்களின் ஒருநாள் ஊதியமான ரூ.94 லட்சம், போபால் வளாக ஊழியர்கள் ரூ.10 லட்சம் என்று ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை, அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு விஐடி வேந்தரிடம் வழங்கினர். இதையடுத்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாவட்டம் வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.7 ஆயிரத்தி 500, 2வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3வது பரிசாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் 24 பேருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.