tamilnadu

போராடும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண்க!

போராடும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண்க!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி  உரிமையாளர்களின் கோரிக்கை களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று, தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்,  கட்சியின் மாநிலக்குழு அலுவல கத்தில், செவ்வாயன்று (ஏப்.15) மாநில  செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி,  மத்தியக் குழு உறுப்பினர்கள் என்.குண சேகரன், கே.பாலபாரதி, மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 பாதிப்பில் 10 லட்சம் தொழிலாளர்கள்!

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதவீதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை,  திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தறிகள் கூலிக்கு நெசவு  செய்யும் உரிமையாளர்களை கொண்டு உள்ளன. தமிழ்நாட்டில் 10.48 லட்சம் தொழிலாளர்களும், அதில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சரிபாதி தொழிலாளர்களும் விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக, கோவை,  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, கூலிக்கு  நெசவு செய்யும் தறி உரிமையா ளர்கள், வேலைநிறுத்தம் செய்து வரு கின்றனர். மின் கட்டண உயர்வு, நூல்  விலை உயர்வு போன்ற காரணங்க ளால், இந்த பிரிவினருக்கு வழங்க சம்ம தித்து, செய்து கொண்ட ஒப்பந்த அடிப் படையில், கூலி உயர்வினை நீண்ட கால மாக பெறும் உற்பத்தியாளர்களுக்கு அமலாக்கவில்லை; மாறாக, குறைத்து உள்ளனர்; இது நியாயமற்றதாகும்.

முதல்வர் - அமைச்சர் தலையிட வேண்டும்!

நியாயமான கூலி கிடைக்க வில்லை என்ற காரணத்தால் பல்ல டம், சோமனூர் பகுதிகளில் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தறிகள் உடைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மிகுந்த கொடு மையான இந்த சூழலை, தமிழ்நாட்டின் ஜவுளித்துறை அமைச்சரும், முதல்வ ரும் தலையிட்டு தடுத்திடவும், தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தவும் வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்று தொழி லாளர்களாக உள்ள சுயதொழில் பிரிவி னர் அதிகம். அவர்களின் பொருளா தாரப் பங்களிப்பும் அதிகம். இதை கவ னத்தில் கொண்டு, வேலைநிறுத்தம் செய்து வரும் இந்த சிறு-குறு உற்பத்தி யாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி  உள்ளிட்ட கொள்கைகள், தமிழ்நாட்டு  உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலா ளர்கள் மீது ஏற்படுத்தி வரும் கொடுமை யான பாதிப்புகளுக்கு எதிரான போராட் டங்களை வலுப்படுத்துவது, அந்த தொழிலாளர்களின் பாதுகாப்புடன் இணைந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே, வேலைநிறுத்தம் செய்து வரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்களின் கோரிக் கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்)-யின் மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.