districts

விஐடியில் உதவித்தொகையுடன் பி.எஸ்சி, பிசிஏ பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

வேலூர், மார்ச் 19- வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பிசிஏ., பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித் தொகையுடன் தகவல் தொழில்நுட்ப துறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தலை வரும் விஐடி வேந்தருமான முனைவர். கோ.விசுவநாதன் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- சென்னை, ஆஸ்பையர் சிஸ்டம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அனை வருக்கும் உயர்கல்வி அறக்கட்ட ளையும் இணைந்து வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாணவர்க ளுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சியுடன், வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி திட்டத்தினை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அதற்கான பயிற்சி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் பி.எஸ்சி., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பிசிஏ., பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பயிற்சி முடித்த பிறகு நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பை பெற்று தர முயற்சி கள் மேற்கொள்ளப்படும். இதற்கான விவரங்கள் பெற வும், பயிற்சியில் சேர பதிவு செய்யவும் 8428408872 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது polestar@aspiresys,com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய பயோடேட்டாவை சமர்ப்பிக்க வேண்டும். வரும் 27ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக பதிவு செய்த வர்கள் மட்டுமே திறனறித்தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்