districts

img

முழு பொதுமுடக்கம்: வேலூரில் வெறிச்சோடிய சாலைகள்

வேலூர், ஜன. 9- தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வேலூர் மாநகர பகுதியில் பால், மருத்துவமனை, மருந்துக் கடைகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. வேலூர் அண்ணா சாலை, காட்பாடி சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது.  காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, விஐடி சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. வேலூர் மாநகரப் பகுதியில் சனிக்கிழமை இரவு காய்கறி, மீன், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

 வேலூர் மாவட்டத்தில் பொது முடக்கத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லை கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனை, திருமணம் ஆகியவற்றிற்கு செல்வதற்கு உரிய ஆதாரங்களை காண்பித்த பிறகு காவல்துறையினர் அனுமதி அளித்தனர். ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு, வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவமனைக்கு வருபவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வேலூர் திரும்புபவர்கள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லை என்றால்,  வேலூர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை 9498181358, 9092700100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி, சந்தேகங்களை கேட்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.