வேலூர், ஜூலை 15- தமிழகத்தில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்க வேண்டும். நகர வங்கிகளை மாவட்ட அளவில் பலப்படுத்த வேண்டும். 2015 முதல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் பணிமூப்புபட்டியலை வெளியிட வேண்டும். மாவட்ட மத்திய வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளத்தின் சார்பில் வேலூர் அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு சங்கத்தின் கவுரத் தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் சசிகுமார் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பேசினர்.