திருப்பூர், பிப்.8- திருப்பூர் அருகே பரம்பிக்கு ளம் - ஆழியாறு பாசனத் திட்டக் கால்வாயில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, விவசாயப் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்து செல்ல வழியில்லாமல், அங்கிருந்து வெளியேறி அரு காமை நிலத்திலும், சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடி விரயமானது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாச னத் திட்டத்தில், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஜன.29 ஆம் தேதியன்று திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 13 ஆம் தேதி வரை 135 நாட்க ளுக்குள் போதிய இடைவெளியில் சுமார் 10 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி தண்ணீர், ஐந்து சுற்றுக ளாக விடப்படும். இதனால் உடு மலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கேயம் மற்றும் கோவை மாவட்டத்தில் சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் விளைநிலங்க ளுக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்திருந்தனர். மூன்றாம் மண்டலப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 10 நாட்க ளுக்குப் பிறகு சனியன்று திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதிக்கு கோவில்வழி கிளைக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனினும் திருப்பூர் மாநகரத்தை ஒட்டி இருக்கக்கூடிய இந்த கால் வாயில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில், மதகுப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தொடர்ந்து செல்ல வழியில்லா மல், பக்கத்தில் இருந்த நிலப்பகுதி யிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நேரம் தண்ணீர் வெளியேறியதால் பக்கத்தில் இருந்த நிலப்பகுதி பெரியகுளம் போல் காட்சியளித் தது. இதுகுறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரிடம் கேட்டபோது, பிஏபி கால்வாயில் தண்ணீர் விடுவதற்கு முன்பு முழுமையாகத் தூர்வார வேண்டும். குறிப்பாக திருப்பூர் தெற்குத் தாலுகாவில் நகர்ப்புறம் சார்ந்த இந்த கால்வாய் இருக்கும் நிலையில், முறையாக பராமரித்தி ருக்க வேண்டும். தண்ணீர் விரயமா வதால் கடை மடை வரை தண்ணீர் சென்று சேராமல் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தி லும் பிஏபி கால்வாய்களில் வீட்டுக் கழிவுகளை கொட்டுவதால் முழு மையாகத் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப் பட்டது. இங்குமட்டுமின்றி பொங்க லூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல பகுதிகளிலும் இப்பிரச்சனை இருப் பதால் பொங்கலூர் ஊராட்சி ஒன் றிய ஆணையர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது. அரசு நிர்வாகம் உரிய முறையில் தலையிட்டு தூர் வாரி விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண் டும், என்றார். இதுதொடர்பாக முத்தணம்பா ளையம் பகிர்மானக்குழு தலைவர் கே.ஆர்.எஸ்.மணி கூறுகையில், தண்ணீர் விடுவதற்கு முன்பே பொதுப்பணித்துறையினர் கால் வாய்களைத் தூர்வாரினர். எனினும் கால்வாய் அகலமாக இருக்கும் நிலையில் முழுமையாக குப்பை களை அகற்ற முடியவில்லை. இக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வேகமாக தண்ணீர் வரும்போது, கால்வாயில் இருக்கும் கழிவுகள், குப்பைகள் மொத்தமாக அடித்து வரப்பட்டு, திரண்டு வரும். அவை மதகு பகுதியில் அடைப்புடன் சேர்ந்து தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியாமல் இதுபோல் பாதிக்கப் படுகிறது. வீடுகளில் உருவாகும் குப்பைகளை உள்ளாட்சிகள் மூலம் சேகரிக்கப்படுகிறது. திருப் பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியி லும் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனாலும், பொதுமக்கள் அலட்சி யமாக கால்வாய்களில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. மக்களி டம் விழிப்புணர்வு ஏற்பட வேண் டும். இந்த கால்வாயில் இருந்து அமராவதிபாளையம், பெருந் தொழு, கண்டியன்கோயில் வரை சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெறு கிறது. தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு விரயமானவுடன், கால்வாயின் மேல் பகுதியில் தண்ணீர் அளவு குறைக் கப்பட்டு அடைப்பு நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அடைப்பு சரி செய்தவுடன் வழக்கமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடை மடை வரை போகும். இந்த முறை ஐந்து பகுதிகளாகத் தண்ணீர் விடப் படும். எனினும் இந்த சுற்றுத் தண் ணீர் நிறுத்தப்பட்டால், மீண்டும் கால்வாய்களை மக்கள் குப்பைத் தொட்டிகளாக மாற்றி விடுகின்ற னர். மக்கள் விழிப்புணர்வுடன் விவ சாயப் பாசனத்திற்குத் தண்ணீர் விடும் கால்வாய்களில் குப்பை கொட்டாமல் தவிர்த்தால்தான் இப் பிரச்சனைக்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க முடியும், என்றார்.