districts

img

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14 ஆவது பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் பதவியேற்றார்

மயிலாடுதுறை, ஜன.18 - தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14 ஆவது பேரா யராக மறைதிரு முனைவர் கிறிஸ்டியன் சாம்ராஜ் சனிக் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற விழா வில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் பல  நூற்றுக்கணக்கான தேவால யங்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரி, மருத்துவமனைகள், தொழிற்பயிற்சி பள்ளி, பாலர்  பள்ளிகள், மாணவ, மாணவி யர் விடுதிகள் என பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஏழை-எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி சேவையை இலவசமாகவும், மிக குறைந்த கட்டணத்திலும் வழங்கி வருகிறது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. இச்சபையின் (டிஇஎல்சி) 14 ஆவது பிஷப் தேர்தல், கடந்த டிசம்பர் மாதம் திருச்சி  தரங்கை வாசம் தூய திருத்துவ ஆலயத்தில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகிகளான ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை நீதிபதி (ஓய்வு) பால் வசந்தகுமார், தேர்தல் அதிகாரியும் ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதியு மான ரத்தினராஜ், நிதி மற்றும் சொத்து அதிகாரி ஜெயச்சந்தி ரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இத்தேர்தலில் திருச்சபை யின் அனைத்து மாவட்டங் களை சேர்ந்த பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகள் பெற்று, மறைதிரு முனைவர் அ.கிறிஸ்டியன் சாம்ராஜ் 14 ஆவது பேராயராக தேர்வானார். இத்திருச்சபையின் பேராயருக்கான பட்டாபி ஷேகம் எனப்படும் பதவியேற்பு விழா தமிழறிஞரும், கிறிஸ் தவ மத போதகருமான சீகன்  பால்குவால் 1718 இல் கட்டப்  பட்ட புதிய எருசலேம் தேவா லயத்தில் ஜனவரி 14 அன்று பாரம்பரிய முறையில் நடை பெற்றது.

ஜம்மு-காஷ்மீர் உயர்நீதி மன்ற முன்னாள் நீதியரசர் பால் வசந்தகுமார் முன்னிலை யில் நடைபெற்ற, சிறப்பு பட்டா பிஷேக ஆராதனை விழாவில், ஓய்வு பெற்ற 13 ஆம் பேராயர் டேனியல் ஜெயராஜ், 14 ஆவது பேராயரான முனைவர் கிறிஸ்டியன் சாம்ராஜ்-க்கு   பட்டாபிஷேகம் செய்து வைத் தார். பாரம்பரிய கீரிடம், அங்கி, இடுப்பு பட்டையம், கழுத்துப் பட்டையம், தங்கத்திலான சிலுவையுடன் கூடிய கழுத்து செயின், முத்திரை மோதிரம் ஆகியவற்றை அணிவித்து பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.  யூஈஎல்சி தலைவர் ஜான் டாங், ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பேராயர் சாமுவேல் கென்னடி, எஸ்ஏ எல்சி பேராயர் விஜயபாஸ்கர், சிஎல்சி பிஷப் ஸ்டேன்லி ஜோஷ், பின்லாந்து நாட்டின் இஎல்சிஎப் பேராயர் மேட்டி ரிபோ, தான்சான்யா நாட்டின் இஎல்சிடி பேராயர்  அலெக்ஸ் ஜி.மலசுசா, மலேசிய பேரா யர் ஸ்டீவன் லாரன்ஸ், ஸ்ரீ லங்கா சிஇஎல்சி பேராயர் அருள்செல்வன் உட்பட பல்  வேறு நாடுகளை சேர்ந்த பேராயர்களும், டிஇஎல்சி திருச்சபையின் முன்னாள் பேராயர்கள் மற்றும் லுத்த ரன் திருச்சபை பேராயர்கள், பிரதிநிதிகள், வெளிநாட்ட வர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், திருச்  சபை மக்கள் என பல்லாயி ரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  பேராயருக்கான பத்திர சான்றிதழை டிஇஎல்சி நிர்  வாகி நீதியரசர் பால்வசந்த குமார் புதிய பேராயரிடம் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக பல்லாயிரக்க ணக்கான திருச்சபையினர் பேரணியாக வந்து சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  ஜன.14 அன்று மாலை டிஇஎல்சி ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடை பெற்ற புதிய பேராயருக்கான பாராட்டு விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், திருச்சி ராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் செம்ப னார்கோவில் ஒன்றிய பெருந் தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலை வர் சுகுணசங்கரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்தி உரையாற்றினர்.