மயிலாடுதுறை, மார்ச் 14- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள், மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு. 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்கைக்கான மயிலாடுதுறை, மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் மார்ச் 24-ஆம் தேதி அன்று காலை ஒன்பது மணி முதல் இந்திய விளையாட்டு ஆணையம், ராஜன் தோட்டம், தர்மபுரம் ரோடு. மயிலாடுதுறையில்; நடைபெற உள்ளது.
மாணவர்கள்: தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கும், மாணவியர்கள்: தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜுடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையாட்டில் சி;றந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்யலாம். பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 22.03.2022 மாலை நான்கு மணி.