திருச்சிராப்பள்ளி, ஜூலை 25 - இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பாலக்கரை பகுதிகுழு 4-வது மாநாடு ஞாயிறன்று செந்தண்ணீர் புரம் எஸ்.ஆர்.கே. திருமண மண்டபத்தில் நடைபெற் றது. மாநாட்டிற்கு பகுதி தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் துவக்கவுரையாற்றினார். பாலக்கரை பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண் டும். தூய்மையான காவிரி குடிநீர் தினமும் வழங்க வேண்டும். மக்களை அச்சு றுத்தும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தலைவராக ஷாஜகான், செயலாளராக சோலைராஜன், பொருளாள ராக நவநீதகிருஷ்ணன் உள்பட 15 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப் பட்டது. வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலா ளர் லெனின் புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து நிறைவுரையாற்றினார்.