பாபநாசம், ஜன.29 - ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகே னக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முத்தமிழறி ஞர் கலைஞர் 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தர்மபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் புளோ ரைடு அதிக அளவில் கலந்திருப்பதால் அந்த குடிநீரை உட்கொள்ளும் அப்பகுதி மக்க ளுக்கு பல், எலும்பு மற்றும் சிறுநீரக பிரச்ச னைகள் ஏற்படுவதாக கருதி ஒகேனக்கலில் வரும் தண்ணீரைக் குடிநீராக்கி அதனை தர்ம புரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு விநியோகம் செய்வதே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அத்தியாவசிய பணியா கும். தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த வாரம் 4600 கோடி ரூபாய் மதிப்பில் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பையடுத்து ஒகே னக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத் தைக் கர்நாடக அரசு சட்டரீதியாகவும், அரசி யல் ரீதியாகவும் எதிர்க்கும் என்று அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளது கண்டனத் திற்குரியது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கர்நாடக அரசின் வரம்பு மீறிய செயலாகும். ஜப்பான் நாட்டுக் கூட்டுறவு வங்கி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வரு கிறது. இந்த திட்டம் முற்றிலும் தமிழக எல்லைக்குள் செயல்பட்டு வரும் திட்டமா கும். இந்த திட்டத்தைக் கர்நாடக அரசு எதிர்ப்ப தற்கு எந்தவித உரிமையும் இல்லை. எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.