குடவாசல், மே 4 - பூந்தோட்டம் அரசு பள்ளி ஆசிரியைக்கு பாவேந்தர் பாரதிதாசனின் 131 ஆவது பிறந்த நாளையொட்டி ‘செம்மொழி தென்றல் விருது’ வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பூந்தோட்டம் அரசு மேல்நி லைப்பள்ளி ஆசிரியை கோ. ஹேமலதாவுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் 131 ஆவது பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் பசுமைவாசல், குமரி தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தஞ்சா வூர் அக்னி குஞ்சுகள் அறக் கட்டளை, சேலம் கிச்சிப் பாளையம் சரஸ்வதி சாரிட்ட பிள் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆசிரியர் கோ. ஹேமலதாவுக்கு அவரது கல்வி பணியை பாராட்டி ‘செம்மொழி தென்றல்’ என்ற விருது வழங்கப்பட்டது. இவர் சிறந்த ஆசிரிய ருக்கான மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம் பாடு உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை சிறப்பாக செய்ததற்காக, இதற்கு முன் பல்வேறு விருதுகளை பெற் றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விருது பெற்ற மைக்கு ஆசிரியர் ஹேமலதா வுக்கு பூந்தோட்டம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.