மயிலாடுதுறை, டிச.1- மயிலாடுதுறை மாவட் டம் ஆக்கூரில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய மாநாடு வியாழனன்று ஒன் றியத்தலைவர் ஜி.கருணா நிதி தலைமையில் நடை பெற்றது. ராஜகோபால் சங்க கொடியினை ஏற்றி வைத் தார். எஸ்.நல்லதம்பி வர வேற்று பேசினார். மாவட் டத்தலைவர் காபிரியேல் துவக்கி வைத்தார். வாழ்த்தி வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் கே.பி மார்க்ஸ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சண் முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டப் பொரு ளாளர் அ.ராஜேஷ் நிறை வுரையாற்றினார். ஒன்றிய தலைவராக ஜி. கருணாநிதி, செயலாளராக வீ.எம்.சரவணன், பொருளா ளராக டி.வரதராஜன் , துணைத்தலைவராக கம் சலா, துணை செயலாளராக நல்லதம்பி ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. கனமழையால் பாதிக் கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண் டும், முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்ட தகுதியானவர்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும், உதவித்தொகை வழங்க ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்பதை கண் டித்தும், குடியிருக்க தகுதி யில்லாத தொகுப்பு வீடு களுக்கு பதிலாக புதிய வீடு களை கட்டிக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.