திருச்சிராப்பள்ளி, பிப்.10- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். சத்துணவு ,அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் மாடசாமி துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பிரகாஷ், முன்னாள் மாநிலத் தலைவர் சுடலையாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், அல்போன்சா, பிரேம்குமார், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாநில துணைத்தலைவர் செந்தமிழ்செல்வன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன மாவட்டத் தலைவர் ரகுராமன், இன்சூரன்ஸ் சங்க துணைத் தலைவர் ஜோன்ஸ், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், டிஆர்இயூ திருச்சி கோட்டச் செயலாளர் கரிகாலன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் அஸ்லாம் பாஷா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சுதாகர் தலைமையில் தர்ணா நடைபெற்றது. போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.செங்குட்டுவன், ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகர், மாநிலச் செயலாளர் செ. பிரகாஷ், முன்னாள் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத் தலை வர் பரமேஸ்வரி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா ளர் சங்க மாவட்டத் தலைவர் பி. மகா லிங்கம், மாவட்டப் பொருளாளர் வி. சுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செய லாளர் கே.இளங்கோ வரவேற்றுப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். துறைவாரி சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குமரி அனந்தன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். கோரிக்கைகளை குறித்து மாவட்டச் செயலாளர் சி. சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா ளர் அகஸ்டின் நிறைவுரையாற்றினார்.