districts

img

சுகாதார சீர்கேட்டில் திருவாரூர் அரசு மருத்துவமனை நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், ஏப்.1- திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மீது தனிக்கவனம் செலுத்த வேண்டுமென தமிழக  அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக அவர் வெள்  ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்ட மருத்து வக் கல்லூரி மருத்துவமனையின் சுகாதாரம்  கேள்விக்குறியாக உள்  ளது. நோய் தீர்க்க  மருத்துவ மனைக்கு வந்தால் சுகாதார சீர்  கேட்டினால் பல்வேறு நோய்களை  வாங்கி செல்லும் நிலை உள்ளது.  அவசரச் சிகிசைக்கு வரும்  நோயாளிகளை மருத்துவர்கள் உரிய முறையில் கண்காணிக்கின் றனர். பின்னர் அவர்கள் வார்டு களுக்கு மாற்றப்பட்டு மூன்று, நான்கு நாட்கள் ஆனாலும் எந்தவித மருத்  துவச் சிகிச்சை மேற்கொள்வ தில்லை நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக  சந்தேகம் கேட்டால் எதுவும் சொல்லாமல் அலட்சியம் காட்டும் நிலை தொடர்கிறது. தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை பற்றி கேட்டால் வெளியில் தான் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறுவதாக நோயாளிகள் கூறுகின்றனர். மருத்துவமனை வார்டில் கழி வறைகளை பராமரிக்க வேண்டும். நோயாளிகள் தங்கள் நோய் சம்பந்தமாக கேட்கும் கேள்வி களுக்கு உரிய முறையில் ஆலோ சனை வழங்க வேண்டும். தனியார் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்புவது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், இசிசி மற்றும் எக்கோ கருவிகள் உரிய முறையில் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும், மருத்துவக் கல்  லூரி வளாகத்தில் புதிதாக அமைக் கப்பட்ட சித்த மருத்துவமனை எங்கே உள்ளது எனத் தேடிச் செல்லும் நிலை உள்ளது. சித்த மருத்துவமனைக்கு செல்ல  வழி காட்டிப் பலகை வைக்க வேண்டும்.  முதியோர் உயர்தர சிகிச்சை பிரிவு அருகே பல லட்சம் செலவு செய்து  நோயாளிகள் உடன் வரும் நபர்கள்   ஓய்வெடுக்க தங்கும் கட்டடம்,  புற நோயாளிகள் கட்டடம் அருகே உள்ள கழிவறை கட்டிடங்கள் இரண்டாண்டுகளாகியும் தற்போது  வரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதய சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மேல் சிகிச்சை பெரும் வகையில் ஆஞ்சியோ பரி சோதனை செய்ய வேண்டும் என்  றால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூ ரிக்கு அனுப்பும் நிலை உள்ளது. உரிய முறையில், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உயிரி ழப்பும் ஏற்படுகிறது. இதய நோயா ளிகளை காக்க திருவாரூர் மருத்து வக் கல்லூரியில் ஆஞ்சியோ சிகிச்சை ஆய்வுக்கூடத்தை அமைக்க வேண்டும்.  தமிழ்நாடு முதல்வர் மருத்து வத் துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொண்டு மக்கள்  மத்தியில் வரவேற்பைப் பெற் றுள்ள நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரியின் அவல நிலைகளை  சீர் செய்யவேண்டும். மாவட்டத்தில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனை குறிப்  பாக குடவாசல் அரசு மருத்துவ மனை மற்றும் அனைத்து ஆரம்ப  சுகாதார நிலையங்களில்  காலி யாக உள்ள  மருத்துவர்கள், செவிலி யர்கள்  பணியிடங்களை நிரப்ப வேண்டும். லேப்டெக்னீசியன், துய்மைபணியாளர்களை நிய மனம் செய்யவேண்டும்.