திருவாரூர், ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய, நகரக் குழுக்களின் சார்பில் 23-வது அகில இந்திய மாநாட்டு தீர்மா னங்கள் விளக்கப் பேரவை கூடூரில் நடைபெற்றது. பேரவைக்கு நகரக் குழு உறுப்பினர் எம்.பாலசுப்பிர மணியன் தலைமை வகித் தார். ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் அகில இந்திய மற்றும் மாநில மாநாட்டு முடிவுகளை விளக்கிப் பேசினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற் பட்ட கட்சி உறுப்பினர்க ளுக்கு ரசீது வழங்கப்பட்டது. இதில், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், பி.கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசி னர்.