மன்னார்குடி, பிப்.18 - திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் 15 ஆவது மாவட்ட மாநாடு மன்னார்குடி சிட்டி ஹாலில் அமைக்கப்பட்டிருந்த வி.டி.ஆர். ரமேஷ் நினைவரங்கத்தில் நடைபெற்றது. ஏ. நபி தலைமை வகித்தார். சிஐடியு செங் கொடியை மூத்த தோழர் சிட்டிசன், பி. மோகன் ஏற்றி வைத்தனர். அஞ்சலி தீர்மா னத்தை ஏ.ஒன். மணி முன்மொழிந்தார். வரவேற்புக்குழு பொருளாளர் அ.அரி ஹரன் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.ஹனிபாவும், வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் பொன்.ஆறுமுகமும் முன்வைத்தனர். சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் மத்திய பொதுச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் இரா.மாலதி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.பழனிவேல், ஜி.ரகுபதி, துணைச் செயலாளர் எஸ். வைத்தியநாதன், உள்ளாட்சித் துறை சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஏபிடி லோகநாயகி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே. ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.
சங்கத்தின் மாவட்ட தலைவராக ஏ.கே.செல்வம், மாவட்டச் செயலாள ராக எம்.கே.என் ஹனிபா, மாவட்ட பொருளாளராக பொன் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்களை உள்ளடக்கிய 21 புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட் டது. பொருளாதாரத்தின் மிக முக்கிய பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை தனியாருக்கு சாதகமாக நாசம் செய்து வரும் ஒன்றிய அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இதற்கான ஒன்றுபட்ட போராட்டங்களில் ஆட்டோ தொழிலா ளர்களும் கலந்து கொள்ள வேண்டும். சாலை போக்குவரத்திற்கு எதிரான எல்லா சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். கொரோனா பெருந்தொற்றில் கடுமையாக பாதிக்கப் பட்ட வாரியத்தில் பதிவு செய்துள்ள, அனைத்து ஆட்டோ தொழிலாளர் களுக்கும் மீனவர்களுக்கு அளித்ததைப் போன்று மானிய விலையில் பெட்ரோல்-டீசல் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளருக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் மாநாட்டை நிறைவு செய்தும் ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி சிறப்பு ரையாற்றினார். வரவேற்புக் குழு செய லாளர் ஜே.செல்வகுமார் நன்றி கூறி னார்.