districts

img

சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.3- டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட டெங்கு மஸ்தூர் ஊழியர் சங்கம், டெங்கு கொசு ஒழிப்பு சங்கத்தினர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள், என்எம்ஆர் ஊழியர்கள், டெங்கு மஸ்தூர் ஊழியர்கள், சிஐடியு சங்கங்களின் சார்பில் திருவாரூர் துணை சுகாதார இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முரளி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் அனிபா, மாநிலக் குழு உறுப்பினர் பிரேமா, மாவட்டப் பொருளாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறையின் மூலம் வழங்க வேண்டும், மாதம் தோறும் வட்டாரத்திற்கு 30 பேர் வீதம் வேலை வழங்கிட வேண்டும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மீதான அதிகாரிகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.