districts

img

பேருந்து நிலைய கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

குடவாசல், ஆக.18-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலையத்தில் அமைந் துள்ள கட்டணக் கழிப்பறை கடந்த ஒரு மாத மாக பூட்டியே உள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.  குடவாசல் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வர் தற்கொலை செய்து கொண்டார். இத னால் ஒரு மாதமாக இந்த கழிவறை அடைக்  கப்பட்டுள்ளது.  காவல்துறை விசாரணைக்கு தற்காலிக மாக அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாதம் கடந்தும் கட்டண கழிவறையை திறக்காததால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்த முடியாத  நிலையில் உள்ளது.  இதனால், பொதுமக்கள் திறந்த வெளி களை பயன்படுத்துவதால் அந்தப் பகுதி சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது.  மேலும் பெண்கள் மிகவும் சிரமத்துக்குள் ளாகின்றனர்.  எனவே, குடவாசல் பேரூராட்சி நிர்வா கம்  உரிய நடவடிக்கை எடுத்து கட்டணக் கழி வறையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.