districts

திருச்செந்தூர், மைசூர் விரைவு ரயில்கள் பாபநாசத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

கும்பகோணம், அக்.17 - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற  கழகம், மனிதநேய மக்கள் கட்சி  தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொதுக் குழு கூட்டம் கும்பகோணத்தில் நடை பெற்றது. இதில், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்திட வேண்டும்.  கும்பகோணம் மாவட்ட அரசு மருத்து வமனையை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கும்பகோணம் பேருந்து  நிலையத்திற்குள் உள்ள வணிக கடை கள், ஹோட்டல்கள் பயணிகளுக்கு நிற்பதற்கு உள்ள இடத்தை ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பாபநாசம் ஆன்மீக சுற்றுலாத் தல மாகவும் திகழ்கிறது. இவ்வூரை சுற்றி யுள்ள பிரசித்தி பெற்ற கோவில் களுக்கு நாடு முழுவதுமிருந்தும் பெரும் பாலானோர் ரயில் மார்க்கமாகவே வந்து செல்கின்றனர். இதனால், பாப நாசம் ரயில் நிலையத்தின் மூலம் மாதம்  ரூ. 11 லட்சமும், ஆண்டுக்கு சுமார் ரூ.1  கோடியே 58 லட்சம் வருவாய் கிடைக் கிறது.  இந்த ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் தஞ்சாவூர் - சென்னை உழ வன் விரைவு ரயில், திருச்சி - சென்னை  சோழன் அதிவிரைவு ரயில், கோவை -  மயிலாடுதுறை ஜனசதாப்தி அதி விரைவு ரயில் ஆகியவை பாபநாசத் தில் நின்று செல்கின்றன. ஆனால், ஏற்க னவே கடந்த 10 ஆண்டுகளாக நின்று  சென்று வந்த, மைசூர் - மயிலாடு துறை, திருச்செந்தூர்- சென்னை ஆகிய இரண்டு விரைவு ரயில்களும், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு  பிறகு நின்று செல்லவில்லை. இந்த ரயில்கள், பாபநாசம் நின்று  செல்லாத காரணத்தால் 30 கி.மீட்டர்  பயணித்து தஞ்சாவூருக்கு சென்று  ரயில்களில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற பணவிரயமும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே  தெற்கு ரயில்வே நிர்வாகம், திருச் செந்தூர் மற்றும் மைசூர் விரைவு ரயில்கள் பாபநாசம் ரயில் நிலை யத்தில் நின்று செல்ல உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.