districts

img

நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வருவாய்த்துறை

திருவண்ணாமலை,டிச.28- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மாமண்டூர் வரு வாய் கிராமத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை,  வசதி படைத்தவர்கள் சிலர் முறைகேடாக ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த இடங்களுக்கு பட்டாவும் பெற்றுள்ள னர். அந்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் அந்த பகுதி மக்க ளும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரும் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். இதற்கிடையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. செய்யாறு நீதிமன்றமும் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், வருவாய்த்துறையினர் பொது மக்க ளின் கோரிக்கையை ஏற்காமல், நீதி மன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி வருகின்றனர். அரசின் பொது சொத்துக்களை பாதுகாக்க தவறிய வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி (டிச.28) செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சேகரன்,  நிர்வாகிகள் சோலை பழனி பெ.அரிதாசு  வட்டார செயலாளர்கள் டி.வெங்கடேசன், அப்துல்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர்,  கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.