districts

img

சீட்டு நடத்தி பொது மக்களிடம் மோசடி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம்

திருவண்ணாமலை,பிப்.27- சீட்டு நடத்தி பொது மக்களிடம் பணத்தை மோசடி செய்த கும்பலை கைது செய்யக் கோரியும் பணத்தை மீட்டுகொடுக்க வலியுறுத்தியும் திரு வண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யார், ஆரணி, திரு வண்ணாமலை மற்றும் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்த, விஆர்எஸ் சீட்டு நிறுவனம் பொதுமக்களிடமிருந்து மோசடியாக பெற்ற பணத்தை பெற்றுத்தர வேண்டும். தொடரும் தனியார் சீட்டு கம்பெனி மோசடி களை ஆய்வு செய்து, பொது மக்களை பாதுகாக்க வேண்டும்.  வந்தவாசி, செய்யாறு, நகரங்களில் செயல்பட்டு வந்த விஆர்எஸ் நிறுவனம் தீபாவளி, பொங்கல், திருமண சீர்வரிசை என ஏழை, எளிய மக்களிடம் வசூலித்த பல கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய, மோசடி பேர்வழியை கைது செய்ய வேண்டும். மோசடியில் ஈடுபட்ட சம்சு மொய்தீன், நிஷா ஆகி யோரின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் பறி முதல் செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களின் பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ள விஆர்எஸ் நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே திங்களன்று (பிப்.27) காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர். பத்ரி மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார்  ஆகியோர் உரையாற்றினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன் எம்.பிரகல நாதன், ப.செல்வன், ஏ. லட்சுமணன் உள்ளிட்ட பலர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம், மாவட்ட ஆட்சியர் ப.முரு கேஷ் பேச்சு நடத்தினார். அப்போது, விஆர்எஸ் நிறு வனத்தின் மீது விரை வில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்தார். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.