districts

img

இலங்கை தமிழ் மாணவர் யோகாவில் உலக சாதனை

திருவள்ளூர், மே 5- கும்மிடிப்பூண்டி யிலுள்ள இலங்கை தமிழர்  முகாமில் வசிக்கும், 11ஆம் வகுப்பு மாணவன்,  யோகாவில் உலக சாத னைகள் படைத்துள்ளார். ரஞ்சன் - ஜெயலட்சுமி தம்பதியர் மகன் ஆர்.  திவ்யேஷ், (16) அப்பகுதி யில் உள்ள மகாராஜா அக்ர சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆறு ஆண்டு காலமாக யோகா  பயின்று வருகிறார். இவர், தண்ணீர் நிரப்பிய  கண்ணாடி  குவளையை வயிற்று பகுதியில் வைத்து  உடலை பின் நோக்கி வளைத்து கால்களை பிடித் தபடி, டிம்பாசனம் எனும்  யோகாசனத்தில், தொடர் ந்து, 10 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்தார். இவரது சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் நோபல் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. இதற்கு முன் இவர் யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த வர் என்பது குறிப்பிடத் தக்கது. உலக சாதனை படைத்த திவ்வியேஷ், யோகா பயிற்றுனர் சந்தியா, ஆகி யோரை, இலங்கை தமிழர்  முகாம் மற்றும் கும்மிடிப் பூண்டி பகுதியை சேர்ந்த மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.