திருவள்ளூர்,அக் 16- மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் போக்கு வரத்து தொழிலாளர்கள் லோன் வழங்கா மல் போக்குவரத்து நிர்வாகம் அலைக் கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொழி லாளர்கள் தங்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளியின் சம்பளத்திலிருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யும் பணமாகும். இந்த பணம் தொழிலாளி பணி ஓய்வு பெறும் போது, கொடுக்கும் தொகையாகும். இதனிடையே இந்த சேமிப்பு பணத்தில் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழி லாளி தன் குடும்பத்தில் அவசரத் தேவைக்குயின் போது இந்த சேமிப்பு பணத்திலிருந்து கடன் (லொன்) பெற்றுக் கொள்வது வழக்கம். குறிப்பாக கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்காக தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ள விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் நிர்வாகம் கொடுப்பது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரு கில் உள்ள காக்கவாக்கம் லெனின் நகரை சேர்ந்த எம்.செல்வராஜ் என்ற தொழிலாளி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மாநகர போக்குவரத்து கழகத்தில் சென்னை அண்ணா நகர் மேற்கு பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவர் தன் மனைவி, மருத்துவ செலவிற்காக, வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.1.25 லட்சம் பணத்தை பெற 10-12-2021 ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். பத்து மாதங்கள் ஆகியும் லோன் கிடைக்கவில்லை என்கிறார். நிர்வாகத்திடம் கேட்டால் உங்கள் பணம் கணக்கில் தான் உள்ளது, கல்லாவில் இல்லை என கூறுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் லோன் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக சொல்லி தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது திமுக ஆட்சியில் ஒரு வருடம் கடந்த நிலையிலும் லோன் கிடைக்கவில்லை. இந்த சூழலில் மாநகர் போக்குவரத்துக் கழக வைப்பு நிதி விதிமுறைப்படி (விதி-29சி) திருப்பி செலுத்த வேண்டாத மருத்துவச் செலவுக்கான முன் பணத்தை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்ற விதி இருந்தும், காலதாமதம் ஏற்படுகிறது. இனியும் காலம் கடத்தாமல் லோன் வழங்க வேண்டுமென தொழி லாளியும், அவரது குடும்பமும் காத்திருக்கின்றனர்.