திருவள்ளூர்,நவ.3- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 2 ஏரிக ளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட தால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து புதன் மாலை உபரி நீர் திறக்கப் பட்டது. முதலில் 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 2 ஏரிகளிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப் பட்டது. வியாழக்கிழமை நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து 292 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 198 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் புதன் மாலை முதல் பலத்த மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்தது. புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 391 கன அடியாக குறைந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,726 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 21.20 அடி நீர் மட்டத்தில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.